ஒரே மதம் என்பதன் யோக்கியதை இதுதானா? வடகலை-தென்கலை தொடரும் மோதல்கள்

viduthalai
1 Min Read

காஞ்சிபுரம், மே 12- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (12.5.2025) வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் பொதுமக்கள் முன்பாகவே ஆபாச வார்த்தைகளைக் கூறி சண்டையிட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கங்கை கொண்டான் என்ற பெயருடைய மண்டபத்தில் சாமி சிலையைக் கொண்டு வந்து வைத்து பிரபந்தம் பாடுவது வழக்கம்
இந்த நிலையில் பிரபந்தம் முதலில் பாடுவதா அல்லது குறிப்பாக மந்திர புஷ்பம் முதலில் பாடுவதா என்று வடகலை-தென்கலை இரண்டு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது
அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆபாச வார்த்தைகளைப் பேசி சண்டையிட்டுக் கொண்டனர்.. இதனால் கோயிலுக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *