ஒரே மதம் என்பதன் யோக்கியதை இதுதானா? வடகலை-தென்கலை தொடரும் மோதல்கள்

1 Min Read

காஞ்சிபுரம், மே 12- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (12.5.2025) வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு பார்ப்பன அர்ச்சகர்கள் பொதுமக்கள் முன்பாகவே ஆபாச வார்த்தைகளைக் கூறி சண்டையிட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கங்கை கொண்டான் என்ற பெயருடைய மண்டபத்தில் சாமி சிலையைக் கொண்டு வந்து வைத்து பிரபந்தம் பாடுவது வழக்கம்
இந்த நிலையில் பிரபந்தம் முதலில் பாடுவதா அல்லது குறிப்பாக மந்திர புஷ்பம் முதலில் பாடுவதா என்று வடகலை-தென்கலை இரண்டு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது
அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆபாச வார்த்தைகளைப் பேசி சண்டையிட்டுக் கொண்டனர்.. இதனால் கோயிலுக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *