நீதிக்கட்சியின் முன்னோடி சர் பிட்டி தியாகராயரின் 100 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (28.4.2025) சென்னை பெரியார் திடலில் அவரது உருவப் படம் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், கழகத் தோழர்கள் புடைசூழ, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்ரமணியன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் மற்றும் பலர் உள்ளனர்.