“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?

1 Min Read

நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். இனி திராவிடர் கழகச் செய்தியும் அதுவும் சுருக்கமாக வரும் மேற்படி செய்திகளைத் தவிர இதர செய்திகளை சிறிது காலத்துக்கு வெளியிட முடியாதென்பதை நேயர்களுக்கு கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பர்களே “குடிஅரசு” வெறும் செய்திகளைத் தாங்கிவரும் ‘கேட்லாக்’காக மிளிர வேண்டுமா? அல்லது அறிஞூர் பொன் மொழிகளும், பெரியார் அவர்களின் அறிவு விளக்கந்தரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் கொண்டதாக மிளிர வேண்டாமா? என்பதை நேயர்களே எண்ணிப் பாருங்கள். ஆகையால் செய்திகளுக்கும் சாதாரண கட்டுரைகளுக்கும் இனி “குடிஅரசி”ல் இடம் ஒதுக்க முடியாமைக்கு நிருபர்கள் பொறுத்தருள வேண்டும்.

– ஆசிரியர்
குடிஅரசு – பெட்டிச் செய்தி – 07.10.1944

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *