காஞ்சிபுரம் காரப்பேட்டையில் ரூ.250 கோடியில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
3 Min Read

சென்னை, ஏப்.22 மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தை போன்று புற்றுநோய் பாதிப்புகளுக்கான ஆராய்ச்சி மய்யம் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் ரூ.250 கோடி செல்வில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் என்ற பெயரில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

தமிழ்நாடு பேரவையில் நேற்று  (21.4.2025) நடைபெற்ற மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நோயாளிகள் வருகை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவத் துறையில் அளப்பரிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் தரவின்படி 1,000 நோயாளிகளுக்கு அமெரிக்காவிலேயே 3.6 என்ற அளவில்தான் மருத்துவா்களின் சராசரி எண்ணிக்கை உள்ளது. தமிழ்நாட் டில் அந்த எண்ணிக்கை 4-ஆக இருக்கிறது.

தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 56 சதவீதமும், உள்நோயாளிகளின் எண்ணிக்கை 43 சதவீதமும், அறுவை சிகிச்சை 61 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதற்கு நோய்த்தொற்றுகள் அதிகரித் திருப்பது காரணமல்ல. மாறாக, அரசு மருத்துவமனைகளின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதே காரணம்.

கடந்த காலங்களில் உயா் மற்றும் நடுத்தர வகுப்பினரில் 20 சதவீதம் போ் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்தனா். தற்போது அது 40 சதவீதமாக உயா்ந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை 1,000 பிரசவங்களுக்கு 10.4 என்ற அளவில் இருந்த உயிரிழப்பு தற்போது 7.8-ஆக குறைந்துள்ளது.

பேறுகால இறப்பு விகிதமும் லட்சத் துக்கு 96.6-ஆக இருந்தது. தற்போது 39-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் பயனாக தமிழ்நாட்டில் தொற்றா நோய் பாதிப்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி, மாவட்ட சுகாதார சங்கங்கள், தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்டவற்றின் வாயிலாக 25,295 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப் பட்ட செவிலியா்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப் படுகிறது. இன் னமும் 714 செவிலியா்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

நலவாழ்வு மய்யங்கள்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு மாதத்திலும், 208 நகா்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 15 நாள்களிலும் திறக்கப்படும். தமிழில் மருத்துவக் கல்வி வழங்கும் நோக்கில் 23 மருத்துவ பாட நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர 26 நூல்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாதனைகளுக்காக ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்படும் விருதுகளைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியில் 69 விருதுகள் மட்டுமே பெறப்பட்டன. திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில், 785 ஒன்றிய அரசு விருதுகள் உள்பட பல்வேறு அமைப்புகளிடமிருந்து, 1,500-க்கும் மேற்பட்ட விருதுகள் பெறப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளில், 463 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 90 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம்

காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் கூறியதாவது:

இந்தியாவிலேயே பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மய்யமாக மும்பையில் உள்ள டாடா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் விளங்குகிறது. அதுபோன்றதொரு மய்யம் தமிழ்நாட்டிலும் அமைக்கப் பெற வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை யில் ரூ.250.46 கோடி மதிப்பீட்டில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *