மராட்டிய மாநிலத்தில் கட்சி தாவல் பிஜேபியின் தில்லுமுல்லு அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 3 மகாராட்டிய மாநில அரசில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப் பினர்களுடன் இணைந்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் :  பா.ஜனதாவின் ‘வாஷிங் மெஷின்’ தனது வேலையை தொடங்கி விட்டது போலும். வாஷிங் மெஷின் அழுக்கு துணி களை சுத்தமாக்குவது போல், கடுமையான ஊழல் குற்றச்சாட் டுகளை சந்திப்பவர்கள், மகாராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணி அரசில் புதிதாக இணைந்த வுடன், நற்சான்றிதழ் பெற்று விட்டனர். 

அரசியல்

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங் காள மாநில தலைவருமான பாபுல் சுப்ரியோ : ஊழலுக்காக அமலாக்கத்துறையின் விசார ணையில் இருக்கும் தலைவர்கள், தங்கள் கறையையும், களங்கத் தையும் போக்க பா.ஜனதா தயாரித்த வாஷிங் மெஷினில் போடப்பட்டுள்ளனர். இனிமேல், ஊழலை எதிர்ப்பதாக பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் பேசக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள், தங்களுக்கு மரியாதை இல்லை என்று விலகி விட்டன. வாஜ்பாயுடன் இருந்த மூத்த தலை வர்கள், தற்போதைய தலைமையை விமர்சித்து வருகி றார்கள்.  இத்தகைய பா.ஜனதாவில் நின்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற. பதவியை விட்டு விலகியது நான் வெளியேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசியல்

அய்க்கிய ஜனதாதள தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி: அஜித் பவாருடன் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கள், ஒன்றிய விசாரணை அமைப்புகளை தவறாக பயன் படுத்தி மிரட்டப்பட்டுள்ளனர்.

அரசியல்

பீகார் முதலமைச்சர் 

நிதிஷ்குமார்: எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜனதாவுக்கு பயத்தை புகுத்தியதன் விளைவு தான் இந்த நிகழ்வு. இருப்பினும், இது தேசிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அரசியல்

ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய்சிங் :  – ஊழலுக்கு மிகப்பெரிய பாது காவ லரே பிரதமர் மோடிதான். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று 2 நாட் களுக்கு முன்பு அவர் உத்தரவாதம் அளித்த நிலையில், அஜித் பவாரும், சாகன் புஜ்பாலும் மகாராட்டிய அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து தொலைக்காட்சிகளும்  பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல்

மேனாள் ஒன்றிய அமைச் சரும், மாநிலங் களவை உறுப் பினருமான கபில்சிபல்  : – அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் பிரத மர் மோடி உரையாற்றியபோது கூறிய ‘ஜனநாயகத்தின் தாய்’ என்பது இதுதான் போலும். 

அரசியல்

காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜன நாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி :- மகாராட் டிய மாநிலத்தில் மக்கள் தீர்ப்பை மீண்டும் குழிதோண்டி புதைத்திருக்கும் பா.ஜனதாவை கண்டிக்க வார்த்தைகளே இல்லை. ஜனநாயகம் படுகொலை செய்யப்பட் டது மட்டுமின்றி, தங்கள் அவமானகரமான செயல்களுக்கு தேசிய கீதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். ஒருபக்கம், ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில், அரசியல் எதிரிகளை பா.ஜனதா கைது செய்கிறது. மற்றொரு பக்கம், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. பா.ஜனதாவின் அதிகார வெறியை தணிக்க மக்கள் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு  கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *