கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கு வசதிகள் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Viduthalai
2 Min Read

சென்னை,ஜூலை4-வாழ்நாள் சான்றுக்காக, வரக்கூடிய ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவ முதலுதவி, குடிநீர் வசதி களை ஏற்பாடு செய்து தர வேண்டு மென தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.

இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் க.விஜ யேந்திர பாண்டியன் அனைத்து கருவூல அலுவலர்கள், சென்னை யில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி யுள்ள கடிதம்:

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய் வூதியதாரர்கள் ஆகியோர் ஆண்டு தோறும் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும். இதனிடையே, வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க இணைய வழியிலும் வசதி செய்யப் பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியரின் இருப்பி டத்துக்குச் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். 

இணைய சேவை அல்லது பொது சேவை மய்யங்களின் மூல மும் மின்னணு வாழ்நாள் சான்று அளிக்கலாம். ஓய்வூதிய சங்கத்தின் மூலம் கைவிரல் பதிவு கருவியை பயன்படுத்தியும், ஜீவன் பிரமான் செயலியை பயன்படுத்தியும் இருப் பிடத்தில் இருந்தபடியே, மின் னணு வாழ்நாள் சான்று சமர்ப் பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூலத் துக்கு நேரடியாக ஆண்டு நேர் காணலுக்கு வர நேர்ந்தால், அவர் களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடு களை செய்ய வேண்டும். குறிப்பாக, நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியதா ரர்களுக்கு அவர்கள் அமரும் இடம் தூய்மையாகவும், போது மான இருக்கை ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

போதிய குடிநீர் வசதிகள் ஏற் பாடு செய்ய வேண்டும். நேர்காண லுக்கென பிரத்யேகமாக கவுன்ட் டர்கள் அமைக்க வேண்டும். ஓய்வூ தியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் கருவூல அலுவலகங்களில் நேர்காணலில் பங்கேற்கும் போது, திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் போதிய மருத்துவ முதலுதவி முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

ஓய்வூதியதாரர்கள் நேரடியாக கருவூலத்துக்கு வரும் நேர்வில், அவர்களது ஓய்வூதிய புத்தகத்தில் அவர்களின் ஓய்வூதிய நேர்காணல் மாதம் குறித்து பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

ஓய்வூதியதா ரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில், அத்தகைய ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும், நிகழாண்டுக்கான நேர்காணலைச் செய்து கொள்ள லாம். இந்த விவ ரத்தை கருவூலத் துறை அலுவல கங்கள் மூலமாக ஓய்வூதியதாரர் களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து கருவூலங்களுக்கு வழங்கப்பட்ட கைவிரல் பதிவு இயந்திரம் அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் இணையமான ஜீவன் பிரமான் மூலம் ஓய்வூதியதா ரர்கள் தங்களது உயிர் வாழ் சான்றை அளிக்கும் வசதி குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கருவூலத் துறை மென்பொ ருளில் ஓய்வூதியதாரர்களுக்கான வீட்டு முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் உள்பட ஏதேனும் விவரங்கள் விடுபட்டு இருந்தால் அதனை பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் மூலம் பெறப்படும் உயிர்வாழ் சான்றிதழை உடனடியாக கருவூ லத் துறை மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும்.

நேர்காணலின் போது இணைய தள இணைப்பு, மின்சாரம் துண்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓய்வூதிய தாரர்களை காக்க வைக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் விஜயேந்திர பாண் டியன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *