மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை

1 Min Read

சென்னை,நவ.14- மின் பயன்பாட் டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

மேலும் உயர்த்தப்பட்ட மின் கட் டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு, மின் பயன்பாட்டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது. 

இதனால் மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் தமிழ் நாடு அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே மின் வாரியத்திற்கு ஏற்கெனவே ரூ.145 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.196.10 கோடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *