ஆத்தூர், ஏப்.5 கடந்த 29.3.2025 அன்று காலை 10 மணியளவில் கரு மந்துறை பேருந்து நிலையம் அருகே கிளைக் கழகம் தொடக்க விழா துவங்கியது. விழாவுக்கு மாவட்டத் தலைவர்
அ.சுரேஷ் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வர வேற்று பேசினார். மாவட்ட காப்பா ளர் த. வானவில் சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, சேலம் மாவட்ட செயலாளர் சி. பூபதி , ஆத்தூர் நகர தலைவர் வெ. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பு செய்தனர்.
சிறப்பு அழைப்பாளர் பெத்த நாயக்கன் பாளையம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தீ.சிவராமன், ஏ.பாக்கியராஜ் சி.பி.எம். ஒன்றிய செயலாளர், சி.வெங்கடேசன்
சி.பி.எம். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட குழு, வி.சின்னமணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சிபிஎம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை ஜெயராமன் சிறப்புரையாற்றினார். அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என வும், அவர்களின் தன்நலமற்ற உழைப்பையும், தொண்டையும் எடுத்துரைத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாள் விழாவினை திராவிடர் கழகம் ஏன் கொண்டாடுகிறோம் என்று எடுத்துரைத்து உரை நிகழ்த்தி னார். பின்னர் கருமந்துறை கிளைக் கழகத் தலைவராக பெ.ராவணனை நியமித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் நரசிங்கபுரம் நகர தலைவர் சைக்கிள் கடை மணி, நகர அமைப்பாளர் மருத பழனிவேல், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆ. செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணித் தோழர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெ.ராவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் திமுக ஒன்றிய செயலாளர் தீ. சிவராமன் தேநீர் வழங்கி
மகிழ்ந்தார்.