தசரத மகாராஜாவின் தர்பார்!

Viduthalai
2 Min Read

13.11.1948 – குடிஅரசிலிருந்து… 

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப் பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பாரைவிட மீறிவிட்டதே. குடி மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு தானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக் களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக் குபவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ஆம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கை யைக் கலியாணம் செய்து கொடுக் கும்படி கேகய மன்னனைக் கேட் கிறானே, அவன் கிழவனாகி விட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள் ளாமல் தன்னுடைய பட்டணத் தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதி யாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின் னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே.

எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடு வானோ என்று அவனுக்குச் சொல் லாமல், தன் மகனும், உரிமையா ளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மக னான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதார மாகக் கருதப்படும் ராமனும் இவ் வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *