சிட்கோ சார்பில் ரூ.133 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

2 Min Read

சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில் அடுக்குமாடி வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், புதிய தொழிற் பேட்டைகள், பொது வசதி மய்யங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கொலுசு உற்பத்தி வளாகம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிட்கோ மூலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் சேலம் அரியகவுண்டம்பட்டியில் 99,346 சதுரஅடி பரப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.25.34 கோடியில் 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இதன்மூலம், 2000 பேர் நேரடியாகவும், 4 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

சிட்கோ மூலம் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் 1.49 ஏக்கர் பரப்பில் ரூ.32.38 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 618 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 111 அறைகள் கொண்ட தொழிலாளர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தொழிற்பேட்டை

மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்ட, வண்டாம் பாளை கிராமத்தில் 18.83 ஏக்கர் பரப்பிலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம் புலியூர் கிராமத்தில் 27.84 ஏக்கர் பரப்பிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பிலும், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உமையாள்புரம் கிராமத்தில் 20.07 ஏக்கர் பரப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் 42.06 ஏக்கர் பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவைதவிர, சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் அச்சுத் தொழில் குழுமத்துக்கு ரூ.13.46 கோடி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமத்துக்கு ரூ.4.26 கோடி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப் பொருட்கள் குழுமத்துக்கு ரூ.6.65 கோடி, கோவை வெள்ளலூரில் அச்சு வார்ப்புக் குழுமத்துக்கு ரூ.4.44 கோடி, ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் பொது கிடங்கு குழுமத்துக்கு ரூ.6.52 கோடி என ரூ.35.33 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய பொது வசதி மய்யங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *