தமிழ்நாட்டில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 24 அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

வெப்ப நிலை அதிகரிப்பு

வடக்கு உள் கருநாடகா முதல் தென் தமிழ்நாடு வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குறிப்பாக நாளை வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிக மாகவும் இருக்கும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வும் தகவல் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *