மேனாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடனுதவி தமிழ்நாடு அரசு ஏற்பாடு

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 23- முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன் வழங்கப்படுகிறது.
முதல்வரின் காக்கும் கரங்கள் (kaakum karangal scheme) திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் தொழில் கடன் பெற முடியும். யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

“முதல்வரின் காக்கும் கரங்கள்” (Chief Minister kaakum karangal scheme) திட்டத்தின் கீழ் மேனாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனபெறலாம். அவர்களுக்கான ஒரு முக்கியமான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 78ஆவது சுதந்திர நாள் உரையின்போது மேனாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் முனை வோராக உருவாக்கிட ” முதல்வரின் காக்கும் கரங்கள் ” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியம், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

55 வயதுக்குட்பட்ட மேனாள் படைவீரர்கள், மேனாள் படை வீரரின் விதவையர், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், மேனாள் படைவீரர்களின் திருமண மாகாத மகள், மேனாள் படைவீரரை சார்ந்த கைம்பெண் மற்றும் விவாகரத்து பெற்ற மகள் பயன் பெறலாம்.
அவர்களுக்கான வயது வரம்பில் தற்போது வயது 55 என்பதிலிருந்து தளர்வு வழங்கி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட மகன் என்பதிலிருந்து தளர்வு வழங்கி மேனாள் படைவீரருடன் மகன் இணைந்து கடன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடன் பெற்று தொழில் முனைவோராக விரும்பும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேனாள் படைவீரர்கள், மேனாள் படைவீரரின் விதவையர், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், மேனாள் படை வீரர்களை சார்ந்துள்ள திருமணமாகாத மகள், விதவையர் மகள் மற்றும் விவாகரத்தான மகள் [email protected] என்ற இணையவழி தளத்தில் விண்ணப்பிக்கலாம்
மேலும்,விவரங்களுக்கு சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட மேனாள் படைவீரர் நல் உதவி இயக்குநர் அவர்களை நேரில் 044-22350780 தொடர்பு அணுகி அல்லது தொலைபேசி வாயிலாக கொண்ட பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *