மக்கள் நீதிமன்றம் 3536 வழக்குகளில் தீர்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றத்தில் (‘லோக் அதாலத்’தில்), 3,536 வழக்குகளில், 111 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட, தாலுகா அளவில், 154 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

நில ஆர்ஜிதம், பணிகள், தொழிலாளர், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. 3,536 வழக்குகளில், 111.14 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. உயர் நீதி மன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் முகமது ஷபீக், சத்திய நாராயண பிரசாத், லட்சுமி நாராயணன், ராஜசேகர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அய்ந்து அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில், நீதிபதிகள் விஜயகுமார், தனபால் தலைமையில் இரு அமர்வுகளும், வழக்குகளை விசாரித்தன. 

சென்னையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரான நீதிபதி டி.கிருஷ்ணகுமார், இழப்பீட்டு தொகை 1.44 கோடி ரூபாய்க்கான உத்தரவுகளை, பயனாளிகளுக்கு வழங்கினார். உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத் தில், 67 வழக்குகளில், 9.38 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரான, நீதிபதி கே.சுதா தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *