அய்.நா தூங்குகிறதா? காசாவின்மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர் உயிரிழப்பு

viduthalai
1 Min Read

காசா, மார்ச் 19 காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்தக் கொடிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கிய வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்றும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *