திராவிட இயக்க எழுத்தாளர் க. திருநாவுக்கரசு இல்ல மணவிழா

1 Min Read

அரசியல்

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசுவின்  மகன் சிற்றரசு  – நினைவில் வாழும் தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.ஆர். சபாபதியின் பெயர்த்தி எழிலரசி ஆகியோரது மணவிழானை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.   திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளரும். நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

ஆ. இராசா. மு. சண்முகம், தி.மு.க.  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் 

டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். (சென்னை- 9.7.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *