பள்ளிக்கரணை – மேடவாக்கத்தில் புதிய கிளைக் கழகங்கள் தொடங்கப்படும் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read

சோழிங்கநல்லூர், மார்ச் 16- சோழிங்கநல்லூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 9.3.2025 காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் மாவட்டத் தலைவர் வே.பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் இரா.தே.வீர பத்திரன் முன்னிலையில் கடவுள் மறுப்பு கூற தொடங்கியது,
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வைக்கம் போராட்டம் வெற்றி நூற்றாண்டு விழா மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடந்த கழகப் பொதுக்குழு தீர்மானங்களின்படி பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கதில் புதிய கிளைக் கழகங்களை ஏற்படுத்துவது, கிராமப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விஜய் உத்தமன்ராஜ் (செயலாளர்), க.தமிழினியன் (துணைத் தலைவர்), ஜெ.தேவி (மகளிரணித் தலைவர்), நித்யானந்தம் (இளைஞரணித் தலைவர்), அரசு (பகுத்தறிவாளர் கழகம்), மணிகண்டன் (தொழிலாளர் அணி), அரங்க ராஜா (மேடவாக்கம்), ராஜேந்திரன் (ஓட்டுநர்) பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட மகளிரணித் தலைவர் ஜெ.தேவி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *