பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

பட்டுக்கோட்டை, மார்ச்16- பட்டுக்கோட்டை மெரினா உணவகத்தில் 13.3.2025 வியாழன் அன்று மாலை 5:45 மணி அளவில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையிலும் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காமராஜ், முன்னிலையிலும் பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சு.அரவிந்த்குமார் வர வேற்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் கடவுள் மறுப்பு கூறிட கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரை யாற்றும் போது கழகத் தலைவர் ஆசிரியரின் செயல்பாடுகள் அறிந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரும் முன்பு தந்தை பெரியார் அவர்களின் கருத்தை எப்படி அறிந்து செயல்படுவவார்களோ – தற்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஆலோசனை கேட்கும் முக்கிய இடத்தில் இருக்கிறார் என பல்வேறு கருத்துகள் எடுத்து ரைத்தார்.

பட்டுக்கோட்டை கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து துரைராஜ், மாவட்ட கழக துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை நகர கழகத் தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மதுக்கூர் மாணிக்க சந்திரன், என்.கே.ஆர் நாராயணன், பட்டுக்கோட்டை ஒன்றிய கழக தலைவர் இரெ.வீரமணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக தலைவர் ஆசிரியர் சி.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர் ஆ.சண்முகவேல், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் குறிச்சி கனக.இராமச்சந்திரன், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் நா.வை.இராதாகிருஷ்ணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மன்னங்காடு ம.சிவஞானம், செயலாளர் கருப்பூர் முருகேசன்,முன்னாள் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் மதுக்கூர் ரெ.பாலா

உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் சிறந்த முற்போக்கு சிந்தனையாளரும், கவிஞருமான நந்தலாலா மறைவுக்கும், மதுக்கூர் கழகத் தோழர் ரெ.பாலாவின் தந்தையார் ரெத்தினவேல் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அவர்களின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கடந்த அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக் கப்படுகின்றது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு ஆன விடுதலைக்கு பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர தந்தை பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத் திற்கு பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *