பகுத்தறிவுப் புலவர் பேராசிரியர் ந.வெற்றியழகன் படத்திறப்பு 12.03.2025இல் ஆங்கரையில் மகள் தமிழ் மலர் இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தோழர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தூய வளனார் கல்லூரி தமிழ் பேராசிரியர் நெடுஞ்செழியன் (ஓய்வு), வனத்துறை கோவிந்தராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். படத்திறப்பு விழா புள்ளம்பாடி கழக தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. திருச்சி குறள் மணி, பேராசிரியர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியம் ,லால்குடி ஒன்றிய செயலாளர் காட்டூர் மணிவாசகம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட் நிறைவுரையாற்றினார். வெற்றியழகன் மகள் தமிழ் மலர் நன்றி உரையாற்றினார். படத்திறப்பு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ,1000/-தமிழ் மலர் நன்கொடை வழங்கினார்.