குமரி மாவட்ட கழக சார்பாக அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

1 Min Read

கன்னியாகுமரி, மார்ச் 12- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.

மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு மாவட்ட தலைவர் இனிப்புகள் வழங்கினார். கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை உரையாற்றினார்.
கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.அய்சக் நியூட்டன், எஸ்.அலெக்சாண்டர், மாநகர திராவிடர்கழக தலைவர் ச.ச கருணாநிதி, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கழகத் தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், பிராங்கிளின் மற் றும் பெரியார் பற்றா ளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *