பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை மிகு பரிசுகள்

1 Min Read

வல்லம், மார்ச் 12- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் இயந்திரவியல் துறை மாணவர்கள் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பரிசு களை வென்றனர்.

மாதிரி திட்டத்திற்கான
இரண்டாம் பரிசுகள்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் கும்ப கோணம் அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் 07.03.2025 அன்று நடை பெற்ற “மெக்; இக்னிடோ – 2K25” (MECH IGNITO – 2K25) என்ற தலைப்பிலான தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத் தரங்கில் நடைபெற்ற மாதிரி திட்ட கண் காட்சியில் (Project Expo) கலந்து கொண்டு “Broom Stick Machine” என்ற மாதிரி திட்டத்தை வடிவமைத்த இக்கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் ச.உத்தண்டராமன், ஜெ.சுதர்சன் ஆகியோர் இரண்டாம் பரிசு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.500-ம் பெற்றுக் கொண்டனர்.
பரிசுகளை வென்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *