பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை மிகு பரிசுகள்

viduthalai
1 Min Read

வல்லம், மார்ச் 7- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

முதல் மற்றும்
இரண்டாம் பரிசுகள்

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 28.02.2025 அன்று எலெக்ட் ஸ்பார்கோ 2025 (Elect Sparko – 2025) என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் நடைபெற்ற மாதிரி திட்ட கண்காட்சியில் (Project Expo) கலந்து கொண்டு “Smart Hybrid UPS Charging System using Solar & Wind Energy” என்ற மாதிரி திட்டத்தை வடிவமைத்த இக்கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர் எ.வினோத் குமார் முதல் பரிசை வென்றார்.
மேலும் இக்கல்லூரியின் மூன்றா மாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்; எஸ்.சிவா வடிவமைத்த “Water Quality Monitoring Systems Based on IOT” என்ற மாதிரி திட்டம் இரண்டாம் பரிசை வென்றார்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள்

கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலெக்ட் ஸ்பார்கோ 2025 (Elect Sparko – 2025) என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்ட வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் எஸ்.இளமாறன் “Electric Car” என்ற தலைப்பிலான தொழில்நுட்பக் கட்டுரை வாசித்தளித்து இரண்;டாம் பரிசை வென்றார்.

மேலும் இக்கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி எ.பவித்ரா“Artificial Intelligence in Power Station” என்ற தலைப்பிலான தொழில்நுட்பக் கட்டுரை வாசித்தளித்து மூன்றாம் பரிசை வென்றார். பல்வேறு பரிசுகளை வென்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *