தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – மொழிப் போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்து எழுதிய ‘‘க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு’’ புத்தகத்தினை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளருமான சா.சி.சிவசங்கர் வெளியிட்டார். நூலினை, சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குடும்பத்தினர், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், சுபா.சந்திரசேகர், கலா.சுந்தரமூர்த்தி, விடுதலை நீலமேகம், சிந்தனைச் செல்வன் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர் (3.3.2025)
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு நூலினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:சுயமரியாதைச் சுடரொளி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books