இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இல. திருப்பதி தலைமையில் மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன், மாவட்ட ப.க செயலாளர் பெத்தையா, மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் பறையிசை முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஈஸ்வரன், திமுக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும், இளைஞர்களும் திரளாக வந்து வரவேற்று மகிழ்ந்தனர். (26.2.2025)
இராஜபாளையம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books