‘போதைப் பொருள் வேண்டாம்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் நடைப் பயணம்!

viduthalai
1 Min Read

சென்னை, பிப். 23- ரோட்டரியின் 120-ஆவது தொடக்க நாளை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234, யுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான ‘வேண்டாம் போதைப் பொருள்’ என்ற பிரச்சாரத்துக்கான ‘அமைதி நடைப் பயணத்தை’ இன்று (23.2.2025) நடத்தியது.

தமிழ்நாடு

இதில் சென்னையைச் சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ரோட்டராக்ட் உறுப்பினர்கள், ரோட்டரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். லேடி வெலிங்டன் பள்ளியிலிருந்து ராணி மேரி கல்லூரிக்கு இந்த நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. பதின்பருவத்தினர், இளைஞர் களிடையே போதைப் பொருள் பிரச்சினை, அது சார்ந்த குற்றங்களுக்கு எதிரான ஒரு கூட்டுத் தீர்மான உணர்வை இது வெளிப்படுத்தியது.

இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் என்.எஸ்.சரவணன் டிஸ்ட்ரிக்ட் ரோட்டராக்ட் அமைப்பின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், மயிலாப்பூர் மண்டல உதவி காவல் ஆணையர் டி.விவேகானந்தன், மாநாட்டின் தலைவர் எஸ்.ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *