எனது வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் அறிவியலாளர் கென்னித்ராஜ் உரை

Viduthalai
2 Min Read

அறந்தாங்கி, பிப். 18- மனிதநேய மருத்துவர், தட்சிணாமூர்த்தி தலை மையில் இயங்கிவரும் “திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு” செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாதனைப் படைத்துவரும் “ரோபோடிக் விஞ்ஞானி” கென்னித் ராஜ் அன்புவுக்கு பாராட்டுவிழா அறந்தாங்கியில் நடைபெற்றது.
சி.பி.எம்.மாநிலக்குழு உறுப்பினர் கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசு வழக்குரைஞர், வெங்கடேசன் உள் ளிட்ட கல்வியாளர்கள், சான்றோர் பெருமக்கள் பலரும் பங்கேற்றனர்.
மருத்துவர் தெட்சிணாமூர்த்தி தொடக்கவுரையாற்றினார். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். வழக்குரைஞர் வெங்க டேசன் “மெய்ச்சுடர்” ஆசிரியர் வெங்கடேசன், சற்குணம் ,கராத்தே கண்ணையன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பார்கானில் இருந்து, நன்றியுரையாற்றிய கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட அனைவரும் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியாருக்கு மனிதகுலம் எவ்வளவு நன்றிக்கடன் பட்டுள்ளது என்பதை விளக்கி உரை நிகழ்த்தினர்.
ஏற்புரையாற்றிய கென்னித்ராஜ் அன்பு பேசும்போது, தனது வளர்ச் சிக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார் தான். எனக்கு கிடைத்த புகழுக்கும் பெருமைக்கும் அவரே காரணம். அனைத்து புகழும் பெரியாரையே சாரும் என்று பேசினார்.

கவிச்சுடர் கவிதைப்பித்தன்
திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் விருது பெற்ற கென்னித்ராஜ் அன்பு, நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகில் நிகழ்த்திவரும் சாதனைகளைப் பாராட்டி, வாழ்த்தி தி.மு.கழக மாநில இலக்கிய அணி செயலாளர் கவிச்சுடர் கவிதைப் பித்தன் நிறைவு ரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:
அரியன பலசெய்த அரியார்க்கும் அரியார்! பெரியன பலசெய்த பெரியார்க்கும் பெரியார்! மானுட சமூகத்தின் மகத்துவத்துக்கெல்லாம் உரியார்! அவர்யார்? அவர்தாம் தந்தை பெரியார், சமூகத்தில் நெடுங்காலமாக மண்டிக்கிடந்த… அறிவுக்கும், மனித நேயத்திற்கும் ஒவ்வாத பிற்போக்குச் சாக்கடையை அப்புறப்படுத்திய ஒப்புயர்வற்ற துப்புரவாளர், அய்யா, எங்கள் தந்தை பெரியார் பெயரிலான பெருமைக்குரிய விருதினை, அறிவியலாளர் கென்னித்ராஜ் அன்புக்கு, எங்கள் தாய்க் கழகமான திராவிடர் கழகம், “வாழும் பெரியாராக” வலம்வரும் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் பொற்கரங்களால் வழங்கிப் போற்றியிருப்பதும் பொருத்தம் தான்

“திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு” ஒரு சாதாரண, சாமா னியக் குடும்பத்தில் பிறந்து, கல்லிலும் முள்ளிலும் நடந்து, பல்வேறு தடைகளைக் கடந்து,கல்வியிற் சிறந்து, உயர்ந்து, புகழ்ச் சிகரத்தின் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டிவரும் அறிவார்ந்த இந்த இளைஞனைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய விழாவில் நானும் பங்குபெற்றேன் என்பதை வாழ்வின் பெரும்பேறு என்று எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன். இவ் வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *