நாகர்கோவில், பிப். 17- குமரிமாவட்ட திராவிடர்கழகம், திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகம். சமுகநீதி கருத்துகள் இட ஒதுக்கீடு உரிமைகள் குறித்த நூல்கள் கழக துண்டறிக்கைகளை கொடுத்து குமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள் தோழர்கள்.
மாணவர்களின் உரிமைக்காக உழைக்கும் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய மேலான செயல் பாடுகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர் குமரி மாவட்ட கழகத் தோழர்கள். இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார் தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி படித்து தங்களுக்காக செயல்படும் திராவிடர் கழகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
குமரிமாவட்டம் முழுமையாக இந்த துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன