தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகம் தாயார் உடற்கொடை

viduthalai
2 Min Read

தென்காசி, பிப். 9- தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை. பாப்பா அவர்கள் கடந்த 25-01-2025 அன்று காலை 10-30-மணிக்கு உடல் நலக் குறைவால் காலமானார். அவர்களின் இரண்டு விழிகளும் பார்வையற்றோர் பயன் பெற திருநெல்வெலி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அம்மையாரின் உடல், ஏற்கெனவே பதிவு செய்தபடி 27-01-2025 காலை 8-30 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

அவரது இறுதி நிகழ்ச்சியில் திராவிடர் கழக குடும்பத்தினர் மற்றும் தி.மு.க, தோழமை கட்சியினர் பலரும் பங்கேற்றனர்.
உடற்கொடை பயணம் தொடங்குவதற்கு முன்பாக தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மருத்துவர் டே.சா.அன்பரசன், மருத்துவர் செ. கவுதமி தமிழரசன், கீழப்பாவூர் நகர தலைவர் மு. இராமசாமி, இளைஞரணி செயலாளர் சவுந்திரபாண்டியன், மேலமெஞ்ஞானபுரம் ப.க.தலைவர் க. தங்கராஜ், மாவட்ட தி.மு.க.பொருளாளர் ஷரீப் ஆகியோர் விழிக்கொடை, உடற்கொடை பற்றிய விவரங்களையும், பயன்க ளையும் சிறப்பாக எடுத்து ரைத்தும், உடற்கொடை வழங்குவதில் திராவிடர் கழகக்குடும்பங்களே முன்னிலையில் உள்ள னர் என்ற புள்ளி விவ ரத்தையும் இரங்கல் உரையில் குறிப்பிட்டனர். கழக குடும்பத்தினரும், தோழமை கட்சியினரும், ஊர் எல்லைவரை முழக்க மிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில் மேல மெஞ்ஞானபுரம் ப.க.செயலாளர் கி.சேகர், அமைப்பாளர் செ.முருகன், கழக குடும்பத்தினர் டே.சாந்தி, அல்பர்ட், கலா, அன்னபுஷ்பம், தங்கம், ஜெயசிங், செல்வமாதா, ராகினி, சுரேஷ்பாபு, ஜான்சி ஜெயமலர், மரியபுஷ்பம், ஞானமணி சமுத்திரம், வேலம்மாள், மல்லிகா, மணிவண்ணன், அமுதன், இனியன், ரம்யா கீழப்பாவூர் நகர செயலாளர் சிவப்பிரகாசம், த.மாசிலாமணி, பாப்பான்குளம் முருகன், ஆண்டிபட்டி செந்தில்குமார், மற்றும் வடகரை பேரூர் மன்ற தலைவர் ஷேக் தாவூது, வடகரை சுந்தரவடிவேல், திருமலைகுமார், மாரியப்பன், இப்ராஹிம். இஸ்மாயில், மணிகண்டன் (ஏ.ஜி.சபை பாஸ்டர்) ஆகி யோர் பங்கேற்றனர்.

உடற்கொடை வழங்க கை.சண்முகத்துக்கு உதவியாக தென்காசி சாந்தி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி பாலமுருகன் உடன் சென்றார். மருத்துவ கல்லூரிக்கு வருகை தந்த நெல்லை மாவட்ட கழகத் தலைவர் ச.இராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காப்பாளர் சு.காசி ஆகியோரும் உடற்கொடை நிகழ்வில் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கை.சண் முகத்தின் தாயார் கை.பாப்பா அவர்களின் விழிக்கொடை, உடற் கொடை நிகழ்வானது வடகரை பகுதி மக்களி டையே மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி யதுடன், திராவிடர் கழகத்தினரின் இத்தகைய மனித நேய செயலை வியந்து பாராட்டினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *