அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

viduthalai
0 Min Read

தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2025) அறிஞர் அண்ணா அவர்களின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள் மற்றும் மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *