பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா – இல்லையா-? அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவும் மதிக்கும் நிலையில், அதுபோலவே நடக்கும் மற்றொரு தொழில்காரரை இழிவாகக் கருதலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’