திருச்சி, ஜன.29- தேசிய வாக்காளர் நாளான 25.1.2025 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படியும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வழிகாட்டுதலின்படியும் மாணவர்கள் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்றனர்.
முன்னதாக நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் வாக்காளர் நாளின் முக்கியத்துவம் குறித்தும் மதம், இனம், ஜாதி, மொழி கடந்து மற்றவர்களின் வற்புறுத்தல்கள் ஏதுமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டது.
நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.