மறைவு

1 Min Read

கொடராச்சேரி ஒன்றியம், மேல உத்தரங்குடி ஊராட்சி கிராமம் சாமிதுரையினுடைய தகப்பனார் பெரியார் பெருந்தொண்டர் மொழிப்போர் தியாகி வியாகுல சாமி – (94 வயது) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று 23.1.2025 மாலை சுமார் 4 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட கழகத்தின் சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மறைவு

மறைவு

குடவாசல் ஒன்றியம் இளைஞரணி தலைவர் உ.பாண்டியனுடைய தந்தை, பெரியார் பெருந்தொண்டர் சீ.உத்திராபதி இன்று (23.01.2025) அதிகாலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று (23.01.2025) மாலை 4 மணி அளவில் நெய்குப்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டு, இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மறைவு

மறைவு

தந்தை பெரியார் பற்றாளர், தன்மான இயக்கத்தவர் என பெருமைக்குரிய கும்பகோணம் மறைந்த அருணாசலத்தின் மகனும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககத்தின் முதல் இயக்குநருமான டாக்டர் அ.பன்னீர் செல்வம் தம் 92ஆம் அகவையில், நேற்று (22.01.2025) புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இறுதி மரியாதைக்காக கும்பகோணம் கொண்டுவரப்பட்டது. தொடர்பு எண் : 9444835592 பி.இரத்தினசபாபதி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *