நாகர்கோவில், ஜன.19– நண்பரின் ஆபாச வீடி யோவை சமூகவலைதளத் தில் பரப்பிய அர்ச்சகரை காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.10 லட்சம் கேட்டு தராததால் அர்ச்சகர் திட்டமிட்டு பழிவாங்கியது அம்பலமானது.
சூப் கடைக்காரர்
நாகர்கோவில் தட்டான் விளை பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவர் சூப் கடை நடத்தி வருகிறார். இவர் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ராமன்புதூர் சந்திப்பில் சூப் கடை நடத்தி வருகிறேன். நானும், நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பகுதியை சேர்ந்த ஈசானசிவம் என்ற ராஜா (34) என்பவரும் நண் பர்களாக இருந்தோம். அர்ச்சக ரான ஈசானசிவம் கோவில் களில் குட முழுக்கு, பூசைகள் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இதற்கி டையே குடமுழுக்கு மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய் யும் கடை தொடங்க இருப்ப தாகவும், அதற்கு ரூ.10 லட்சம் தருமாறும் என்னிடம் கேட் டார். ஆனால் நான் பணம் தரவில்லை.
இந்த பிரச்சினைக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் என்னிடம் பேசுவதில்லை. ஒரு கட்டத்தில் ஈசானசிவத்தின் நண்பர் என கூறி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு கோட்டாரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்தார். அதன்படி நான் அந்த வீட் டுக்கு சென்றபோது ஈசானசி வம் அங்கு இல்லை.
பெண்ணுடன் உல்லாச வீடியோ
அவரது நண்பர் எனக்கு மது ஊற்றி கொடுத்தார். நான் அதிகமாக மது குடித்ததால் அங்கு என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஈசானசிவமும், அவரது நண்ப ரும் எனது சூப் கடைக்கு காரில் வந்தனர். பின்னர் காரில் இருந்தபடி என்னிடம், “நீ கோட்டாரில் உள்ள வீட் டுக்கு வந்தபோது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந் தாய். அதை எனது நண்பர் மூலம் வீடியோ பதிவு செய்து வைத்து உள்ளேன். நான் கேட்ட ரூ.10 லட்சத்தை தராவிட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவேன்” என்று கூறி மிரட்டினார்.
இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. என்னை அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க வைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளனர். திட்டமிட்டு என்னை பழிவாங்கி உள்ளனர். பின்னர் அதை வீடியோ பதிவு செய்து அவர் கேட்ட பணத்தை கொடுக்காததால் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பினர். இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
கைது
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் காவல்துறையினர் ஈசானசிவத்தை கைது செய்த னர். மேலும் அவருக்கு உதவி யாக இருந்த நண்பரை தேடி வருகின்றனர்.