கோவிலா? புரோக்கர்களின் கூடாரமா?

Viduthalai
1 Min Read

திருச்சி, ஜன. 8- திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.
புரோக்கர்களின் அத்து மீறல்களை கோவில் கண் மணிப்பாளர் சிவராம சூரியன், மேலாளர் காளி யப்பன் ஆகிய இருவரும் தட்டிக் கேட்டனர்.
இதையடுத்து கடந்த 4.1.2025 அன்று இரவு, நான்கு பேர் கொண்டகும்பல், இருவரையும் கடுமையாக தாக்கியது. தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்ந்த இருவரும், சமயபுரம் காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.
அங்குள்ள அதிகாரிகள் ‘‘முறைகேட்டை தட்டிக் கேட்கும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். இங்கு பணியாற்றும் அதி காரிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இவ்விஷயத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும், தமிழ்நாடு கோவில் நிர்வாக அதிகா ரிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ்குமார் கூறும் போது, “தமிழ்நாடு முழுதும் செயல் அலுவலர் கள்தாக்கப்படுவது தொடர் கதையாக நடக்கிறது.
‘இதனால், அரசு அலுவலர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். புகார் மனுஅளித்தும் சம்பந் தப்பட்டவர்கள்மீது நட வடிக்கை எடுக்காததைக் கண்டிக்கிறோம்’ என்றார்.

இரண்டு ஊழியர்கள்
பணி நீக்கம்
கடந்த ஆண்டு, நவ., 11இல், ஈரோடு மாவட் டம், கோபிசெட்டிப ்பாளையத்தைச் சேர்ந்த செல் வராஜ் என்ற கூலித்தொழிலாளி, தன் திருமண வேண்டுதல் நிறைவேறியதற்காக, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5,000 ரூபாய் அன்ன தான திட்டத்துக்கு நன்கொடை அளித்தார். அந்த பணத்துக்காக கொடுக்கப்பட்ட ரசீது போலியாக கொடுக்கப் பட்டது என்று தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் பரவியதும், கோவில் நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதையடுத்து போலி ரசீது கோவில் பணியாளர்கள் ஆர்த்தி, விஜய் ஆகியோரை, ‘பணி நீக்கம்’ செய்தும், இந்துமதி என்பவரை, ‘இடைநீக்கம்’ செய்தும், கோவில் இணை ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *