ஞாயிறு அன்றும் பத்திரப்பதிவு செய்யலாம்! விரைவில் வருகிறது புதிய வசதி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,ஜன.8- வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகங்களில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

முத்திரை தீர்வை

தமிழ்நாடு முழுதும், 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. சொத்து வாங்குவோர், அது தொடர்பான அடிப்படை விவரங்களை, ‘இணையம்’ வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சொத்தின் மதிப்பு அடிப்படையில் முத்திரை தீர்வை, பதிவு கட்டணங்களையும் இணையம் வழியே செலுத்த வேண்டும்.

இதன்பின், பத்திரப்பதிவுக்கான நாள், நேரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான, ‘டோக்கன்’ வழங்கப்படும். இதில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் சென்று, பத்திரப்பதிவை முடிக்கலாம். திங்கள் முதல் வெள்ளி வரை, சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். சொத்து வாங்குவோர் வேலைக்கு விடுப்பு எடுத்து வந்து, பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதை புரிந்துள்ள பதிவுத்துறை, மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில், சனிக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டத்தை, 2023இல் அறிமுகப்படுத்தியது.

முதற்கட்டமாக, 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி அமலானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சார் – பதிவாளர்கள், பணியாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

புதிய வசதி

இதுகுறித்து, பதிவுத்துறை தலைமையக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து வாங்குவோர் மத்தியில், சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்வதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை மேம்படுத்தம் வகையில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம். விடுமுறை நாள் என்ற அடிப்படையில், 1,000 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், சொத்து வாங்குவோர் சிரமம் இன்றி பத்திரப்பதிவு மேற்கொள்ள வழி ஏற்படும். எந்தெந்த அலுவலகங்களில், இதை செயல்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *