சிவகாசி மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு

2 Min Read

அரசியல்

சிவகாசி, ஜூலை 19- சிவகாசி மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று நண் பகல் 12மணிக்கு வானவில் மணி அலுவலகத்தில்  நடைபெற்றது.

சிவகாசிமாநகர தலைவர் மா. முருகன் வரவேற்று உரையாற் றினார்.

தலைமை கழக அமைப்பாளர் இல. திருப்பதி கழக செயல்பாடுகள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் செய்ய வேண்டிய களப் பணிகள் குறித்து  உரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் கா.நல்ல தம்பி மாவட்ட செயலாளர் விடு தலை தி.ஆதவன், மணிமாறபூபதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் வான வில் மணி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர்  இரா.ஜெயக்குமார் கலந்துரையா டல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கியும் மாநகராட்சி பகுதி கழகங்களை உருவாக்குவதின் நோக்கம் அதன் இலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பு,  குறித்தும் உரை நிகழ்த் தினார்

சிவகாசி மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்  அறிவித்தார்

திருத்தங்கல் நல்லவன் நன்றி உரையாற்றினார்

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

06.07 2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

வைக்ககம் போராட்ட நூற் றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங்களை சிவகாசி மாநகராட்சிக்கு உட் பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்துவது என முடிவு செய்யப் படுகிறது.

சிவகாசி மாநகராட்சி பகுதி களில் முடிவடைந்த விடுதலை சந் தாவை புதுப்பித்து புதிய சந்தாக் களை சேர்த்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

சிவகாசி மாநகராட்சிகளின் வார்டுகளில் கீழ்க்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகள் அமைக்கப்படுகிறது. கீழ்கண்ட வர்கள் பகுதி கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள்.

சிவகாசி மாநகர திராவிடர்கழகம்

மாநகரத் தலைவர் : மா.முருகன்

மாநகர செயலாளர் : து.நரசிம்மராஜ்

சிவகாசி மாநகராட்சி 4பகுதிகளாக பிரிக்கப்பட்டு 

புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

1, சிவகாசி சாட்சியாபுரம் பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்)

வார்டு 1 முதல் 12வரை.

பகுதி கழகத்தலைவர்: சு.சுந்தரமூர்த்தி

பகுதி கழக செயலாளர்:சி.மணிமாறபூபதி

2, சிவகாசி சித்துராஜபுரம் பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்)

வார்டு 13  முதல் 24வரை.

பகுதிக் கழக அமைப்பாளர்: பே. கண்ணன்

3, சிவகாசி சோலை க்காலனிபகுதி திராவிடர் கழகம் (12 வார்டுகள்)

வார்டு 25 முதல் 36 வரை.

பகுதி கழக அமைப்பாளர்: ஜீவா முனீஸ்வரன்

4, சிவகாசி திருத்தங்கல் பகுதி திராவிடர் கழகம்(12வார்டுகள்)

வார்டு 37முதல் 48 வரை.

பகுதி கழகத் தலைவர்: மா.நல்லவன்

பகுதி கழக செயலாளர் ம.கதிரவன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *