மன்மோகன்சிங் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் படங்களை திறந்து வைத்து முதலமைச்சர் புகழ் வணக்கம்!

1 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (7.1.2025) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இந்திய மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு – புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது படத்தினைத் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் பெருமக்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், தோழமைக் கட்சியின் தலைவர்கள் வைகோ, தொல். திருமாவளவன், சண்முகம், முத்தரசன், காதர்மொகிதீன், அப்துல் சமது, கொங்கு ஈஸ்வரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *