திருச்சி, ஜூலை 19- பெரியார் மருந்தியல் கல்லூரியில் 1990–1992இல் பயின்ற மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் 15.07.2023 அன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
கல்வி பயின்று 30 ஆண்டு கள் நிறைவடைந்ததை முன் னிட்டு முத்துவிழா கொண் டாட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேனாள் மாணவர் சங்கத்தின் தலைவர் முனைவர் ச. கற்பகம் குமர சுந் தரி இந்நிகழ்ச்சியில் வரவேற் புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை தமது வாழ்த்துரையில்:
முத்துக்கள் ஒவ்வொன்றாக கோர்க்கப்பட்டு இன்று 30 ஆண்டுகள் கடந்து தங்களது வீட்டில் முத்துவிழா கொண் டாட வருகை தந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் பெரியார் மருந்தியல் கல்லூரி யில் பயின்ற மாணவர்கள் உல கம் முழுவதும் மருந்தியல் துறை யில் தனிமுத்திரை பதித்து வரு வதாகவும் உரையாற்றினார். மேலும் நமது நிறுவனத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது நம்முடைய மேனாள் மாண வர்கள் சந்தித்து பாசமுடன் உரையாடுவதனை, ஆசிரியர் அவர்கள் பெருமையுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நினைவுகூர்வதையும் தெரிவித்து 1990 முதல் 1992 வரை படித்தமாணவர்களுக்கு பேராசிரியாராக திகழ்ந்த அனு பவங்களையும் மாணவர்களி டத்தில் பகிர்ந்து கொண்டார். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கற்பித்த மனிதநேயத்தோடும் துணிச்ச லோடும் நமது மேனாள் மாணவிகள் செயல்பட்டு பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும். பொன்விழா, வைர விழா கடந்து பவள விழாவினை நமது ஆசிரியர் அவர்களின் தலைமையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறைத் தலை வர் பேராசிரியர் க. உமாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். 1990-1992இல் பயின்ற மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவிகள் ஒவ்வொருவரும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மருந்தாளுநர்களாக, தொழில் முனைவோராக, கல்வியாள ராக திகழ்வதை பெருமையுடன் தெரிவித்தனர். அதுமட்டு மல்லாமல் சிறந்த மருந்தாளுநர் விருது, நலவாழ்வுத் துறையில் சிறந்த சேவைக்கான விருது போன்றவற்றை பெறுவதற்கு காரணமாகத் திகழ்ந்தது பெரியார் மருந்தியல் கல்லூரி என்றும் பெண்களாகிய தங் களுக்கு தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை அனைத்தையும் கொடுத்தது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் என்றும் உணர்வுபூர்வமாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மேனாள் மாணவிகளின் சார்பாக ரூ.40,500 மதிப்புள்ள குளிரூட்டியை (கிவீக்ஷீ சிஷீஸீபீவீtவீஷீஸீமீக்ஷீ) முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையிடம் வழங்கினர்.
மேனாள் மாணவர்களுக் கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேனாள் மாணவர் சங்க பொருளாளர் பேராசிரியர் அ. ஜெயலெட்சுமி, செயலாளர் பேராசிரியர் ச. இராஜேஷ், இணைச் செயலர் பேராசிரியர் எஸ். ஷாமலர் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் மேனாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் ச. ஷகிலா பானு நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 1990-1992இல் பயின்ற 20 மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.