கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.1.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: ஆணவப் போக்குடன் இருக்கும் ஆளுநரை விரட்டியடிப்போம், கனிமொழி,எம்.பி. ஆவேசம்.
*துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: அரசியல், சட்டப் போராட்டம் நடத்தப்படும்.
* டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்ட பேரணி, மதுரையில் ஆர்ப்பாட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டெல்லி மாநில தேர்தல் பிப்ரவரி 5இல் நடைபெறும்; 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு;

தி இந்து:

* புதிய யுஜிசி வரைவு விதிகள், பல்கலைக்கழகங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் முயற்சி, என மாணவர்கள் அமைப்பு, ஆசிரியர்கள் கண்டனம்.

தி டெலிகிராப்:

* 2024-2025 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.4% வளர்ச்சி அடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது, இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும்.

* துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி வரைவு விதிமுறைகள் கூட்டாட்சி, மாநில உரிமைகள் மீதான தாக்குதல்: எக்ஸ் தளத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* கோவில் பூசாரிகளை கொள்ளையடிப்பவர்கள் என பேசியதற்காக கொங்கனி எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தத்தா தாமோதர் நாயக் மீது காவல்துறை வழக்கு. தான் கூறியதை திரும்ப பெற முடியாது என உறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *