அம்பத்தூர், ஜன. 8- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் கலைஞர் 100, ஆசிரியர் 92, விடுதலை 90, தி.மு.க.75, பாசறை 09 ஆகிய அய்ம்பெரும் விழா பொதுக்கூட்டம் 04-01-2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்பத்தூர் பிரிட்டானியா எதிரில் உள்ள அம்பேத்கர் திடலில் அறிவுமானன் இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி கழக கொடியை ஏற்றி வைத்து மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் தலைமையுரை ஆற்ற ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பா.தென்னரசு, திராவிட மணி (வி.சி.க.), எ.கோபி (காங்.), சு.தேவேந்திரகுமார் (மேனாள் நகர மன்ற உறுப்பினர்), த.வ.லால் (84 வது வட்ட தி.மு.க.செயலாளர்), கு.சங்கர் (அம்.தெ.ப.பொ.தி.மு.க.), மா.வள்ளிமைந்தன் (தி.மு.க.தலைமை கழக பேச்சாளர்), திராவிடர் கழக கழக பேச்சாளர் நர்மதா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, பாசறை தோழர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக கோ.பகலவன் நன்றி கூறினார்.