வடுவூர், ஜன. 8- வடுவூர் சுயமரி யாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வி.டி.நடராஜன் 4.1.2025 அன்று மாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு 5.1.2025, ஞாயிறு மதியம் 1.30 மணி அளவில் வடுவூர் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்வு அன்றே படத்திறப்பு நிகழ்வும் , நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து இரங்கலுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.குணசேகரனும், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கும் முன்னிலை வகித்து இரங்கலுரை ஆற்றினர்.
தி.மு.க. நீடாமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கவியரசன், இரங்கலுரையாற்றினார். ஒரத்தநாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர். பி.இராஜமாணிக்கம் இரங்கலுரை ஆற்றி படத்தினை திறந்து வைத் தார்கள்.
வடுவூர்.ஊ.ம.தலைவர் பால சுந்தரம். தஞ்சை மாநகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் வீரக்குமார், தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணித்தலைவர். சடையார் கோவில் நாராயணன், அதிமுக.மேனாள் ஒன்றியச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்களும்.ப.க.மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், ப.க. மன்னை மாவட்டச் செயலாளர் த.வீரமணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணை தலைவர் பேரா.ந.எழிலரசன், தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மாவட்டத் தலைவர் கருவிழிக்காடு சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் இரங்கலு ரையாற்றினர்.
நிகழ்வில் நீடா. ஒன்றியத்தலைவர். தங்க.பிச்சைக்கண்ணு, ஒன்றியச் செயலாளர், சதா.அய்யப்பன், கருவாக்குறிச்சி கோபால், தஞ்சாவூர்.டேவிட் நீடா. மேனாள். ஒன்றியச் செயலாளர் .கலியமூர்த்தி, வடுவூர் . ஆசையொளி, லோகநாதன், வடுவூர்.காமராஜ். தஞ்சாவூர். குட்டிமணி, ஒரத்தநாடு ரஞ்சித் குமார், திராவிடச் செல்வன் மற்றும் ஏராளமான கிராம மக்களும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
வி.டி.நடராஜனின் அருமைப் புதல்வர்கள் தங்கதுரை, தம்பிதுரை ஆகியோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசி வழியே இரங்கல் தெரிவித்தார்கள். தந்தைக்கும் அவர் பின்பற்றிய கொள்கைக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வடுவூரில் உள்ள தந்தை பெரியார் சிலையின் பராமரிப்பு செலவினை எங்கள் குடும்பம் ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்தனர்.