தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

2 Min Read

சென்னை,ஜன.7- தமிழ்நாட்டில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றி யங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப் பட்டது. இரண்டாகவும், மூன்றாகவும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2021ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி அமைப்பு

2019ஆம் ஆண்டு 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றனர். கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 92,316 பேர் பதவியேற்றனர். அவர்களது பதவிக்காலம் நேற்று முன்தினம் (ஜன.5) முடிவுற்றது.

இதற்கு முன்னதாக மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பான வழக்கில், “வார்டுகள் மறுவரை செய்யும் பணி, ஊராட்சிகள் பலவற்றை நகர்ப்புற ஊராட்சிகளுடன் இணைக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பிறகே தேர்தல் நடத்த முடியும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைந்த மூன்றடுக்கு ஊராட்சி களுக்கு தனி அலுலவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் பா.பொன்னையா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் பொறுப்பு வகித்தவர்களின் பதவிக்காலம் ஜன. 5ஆம் தேதியுடன் முடிவடைந் துள்ளது.

தனி அதிகாரிகள்

இந்த மூன்றடுக்கு ஊராட்சி களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய ஜன.6ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் செலுத்தப்படும் வரவினங்களைக் கண்காணிக்க வேண்டும்.

ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கு வதை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், அரசாணைகள், விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *