ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த கோலி சியாமளா (52) வங்காள வளைகுடாவில் சுமார் 150 கி.மீ நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே, இந்தியா -இலங்கை இடையே இருக்கும் பாக் நீரிணையை 13 மணி நேரத்தில் கடந்திருந்தார். லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக நீச்சல் பயிற்சி செய்ததாக ஷியாமளா கூறினார்.