கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்

Viduthalai
2 Min Read

தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு முடிந்து
திரும்பிய பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 34 பேர் படுகாயம்
கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் சென்றது. இதன்பின்னர் சுற்றுலாத் தலங்களை அவர்கள் பார்வையிட்டதும், சுற்றுலா பயணிகளுடன் மீண்டும் மாவெள்ளிக்கரா நோக்கி அந்த பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது.இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் குட்டிக்கானம் மற்றும் முண்டகாயம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புள்ளுப்பரா என்ற இடத்திற்கு அருகே சென்றபோது பேருந்து, திடீரென விபத்தில் சிக்கியது.
இதில், 34 பயணிகளுடன் சென்ற பேருந்து இன்று காலை 6.15 மணியளவில் 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அருண், மோகன், சங்கீத் மற்றும் பிந்து என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.விபத்தில் காயமடைந்த நபர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. பேருந்தில் பிரேக் சரிவர செயல்டாத சூழலில் விபத்து நடந்துள்ளது என பயணிகளில் சிலர் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஏழுமலையான் சக்தி இதுதானா?
திருப்பதியில் ஆம்புலன்ஸ் மோதி
மூன்று பெண் பக்தர்கள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் இருந்து ஒரு குழுவினர் மஞ்சள் ஆடை தரித்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் கும்பலாக பீலேர் பகுதி வழியாக நந்து வந்து கொண்டிருந்தனர். நேற்று (ஜன. 6)அதிகாலை இந்த குழுவினர் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம், நரசிங்காபுரம் எனும் இடத்தில் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அதே சமயம், மதனபள்ளியில் இருந்து ஆம்புலன்ஸ் திருப்பதி நோக்கி ஒரு நோயாளியுடன் சென்று கொண்டிருந்தது. அதிகாலை கடும் பனி பொழிவு இருந்த காரணத்தினால், எதிரே வரும் வாகனங்களும் தெரியாத நிலையில், நடந்து சென்று கொண்டிருந்த இவர்கள் மீது அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது. இந்த கோர விபத்தில் அன்னமைய்யா மாவட்டம், சம்பாலபல்லியை சேர்ந்த பெத்த ரெட்டம்மாள் (40), லட்சுமம்மாள் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மூவரையும் அதே ஆம்புலன்ஸில் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இது தொடர்பாக சந்திரகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *