நாட்டுப் பண் பாடுவதை சாக்குப்போக்காகக் கூறுகிறார் உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து

viduthalai
1 Min Read

சென்னை,ஜன.7- உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்கு – கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். ஜன. 11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று (6.1.2025) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களிடம் மு.அப்பாவு கூறியதாவது:

அலுவல் ஆய்வுக்குழு முடி வின்படி, மறைந்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு (7.1.2025) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

தொடர்ந்து 4 நாட்கள் (ஜன.11) கூட்டத் தொடர் நடைபெறும். நான்காம் நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பதிலுரை வழங்குவார். முதல் 3 நாட்கள் கேள்வி நேரம் இடம்பெறும்.

விருப்பம் இல்லை

பேரவையில் ஆளுநர் பேசத் தொடங்கியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்புச் பட்டை அணிந்து வந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்பதாக கூறி அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கலவர நோக்கத்துடன் செயல் பட்டதால் அதிமுகவினர் வெளி யேற்றப்பட்டனர். ஆளுநருக்கு உரையை வாசிக்க மட்டுமே உரிமை. சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை. உரையை வாசிக்க விருப்பமின்றி, தேசிய கீதத்தை சாக்குபோக்காக ஆளுநர் கூறு கிறார் என தெரிகிறது. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநி லங்களில் இந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் வேண்டு மென்றே திட்டமிட்டு செயல்படுகிறார். இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *