சபாஷ், சரியான நடவடிக்கை!

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு – திருச்சி சிவா தாக்கீது! 

புதுடில்லி, ஜூலை 20 தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தனது தன்னிச்சையான போக்குகளால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பொது வெளியில் மனம் போன போக்கில் கருத் துகளைக் கூறி, அரசமைப்பு சட்டத்தை அவமதித்து வருகிறார். தொடர்ந்து அவ்வாறு நடந்து வரும் ஆளுநரை திரும் கோரி தி.மு.க. பொருளாளரும், மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் முறையே இரு அவைத் தலைவர்களுக்கும் தாக்கீது அளித் துள்ளார்கள். மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தாக்கீதில் தெரிவித்ததாவது:

இந்தத் தாக்கீது மூலமாக நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு மீது அரசமைப்பு சட்டத்துக்குப் புறம்பாக உள்ளர்த்தத்துடன் ஆளுநர் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதனால் நாடாளுமன்றத்தின் நடவடிக் கைகளை ஒத்திவைத்து, அவசர அவ சியமாக ஆளுநரை திரும்பப் பெறு வதுபற்றி விவாதிக்க வேண்டுகிறேன். 

திருச்சி சிவா

மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலை வர் திருச்சி சிவா  தாக்கீதில் தெரிவித்ததாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும், சட்ட மன்ற அதிகார வரம்பையும் மீறி, மாநில மக்களின் தேவைகளை நிறைவே ற்றும் பொறுப்புகளுக்கு முட் டுக்கட்டையாக உள்ள தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டி, மாநிலங்களவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்து, அவசர அவசியமாக விவாதம் நடத்த அவைத் தலைவர் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.” 

இவ்வாறு அவை ஒத்திவைப்பு செய்து அவசர விவாதம் நடத்த தாக்கீது அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *