மாணவி வன்கொடுமை வழக்கு ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை பரப்ப வேண்டாம்

Viduthalai
1 Min Read

காவல் துறை வேண்டுகோள்

சென்னை, ஜன.5 அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துகளை பொது வெளியில் ஒளிபரப்பி / பிரசுரித்து வரு கின்றன.

குறிப்பாக எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்”, சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உப கரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய் துள்ளதாகவும்”, “திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புல னாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இவ்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகைய ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக்கூடும். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் புலன் விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *