தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு:
செங்கற்பட்டு
செங்கற்பட்டு பழையபேருந்துநிலையம் அருகில் 22.12.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத்தலைவர் அ.செம்பியன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்புரையாற்றினார்.
கழகபொதுக்குழு உறுப்பினர்கள் செங்கை பூ.சுந்தரம், அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். “உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு”நூலினை அறிமுகம் செய்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் உரை யாற்றினார்.
கழகப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நூலினை வெளியிட்டு வைக்கம் போராட்ட வரலாற்றையும்,தந்தை பெரியாருக்குப் பின் தமிழர் தலைவர் ஆற்றிவரும்அருந்தொண்டினையும் விளக்கி ஒருமணிநேரம் சிறப்பாக உரையாற்றினார்.
நூலினைபெற்றுக்கொண்டு மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திமுக நகர செயலாளர் நரேந்திரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் எஸ்.கே.ஜாகீர்உசேன், மறைமலைநகர் கழகத்தலைவர் திருக்குறள் ம.வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் அ.வெ.முரளி, பகுத்தறிவு கலைத்துறை மாநில தலைவர் மு.கலைவாணன், திருவள்ளுவர் மன்றசெயலாளர்,மா.சமத்துவமணி, செங்கற்பட்டு நகரத்தலைவர் களியப்பேட்டை தமிழ்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்வில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஊனை.ஆர்.இ.பார்த்தீபன், மாவட்ட ப.க. தலைவர் அ. சிவகுமார், மாவட்ட ப.க. செயலாளர் சி.தீனதயாளன், மாவட்ட ப.க.துணைத்தலைவர் சே.சகாயராசு, மாவட்ட ப.க.அமைப்பாளர் மு.பிச்சை முத்து, மாவட்ட துணைத்தலைவர் சாலமன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். இராசேந்திரன், மதுராந்தகம் ஒன்றிய தலைவர் ஆ. யாக்கோபு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கூடுவாஞ்சேரி மா.இராசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் சு ஆனந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சவுந்தரி கருணாகரன், சங்கீதா செம்பியன்,கலைவாணி யாழன், மறைமலை நகர் கழக செயலாளர் ப. முருகன் கல்ப்பாக்கம் நகரத்தலைவர் ம.விசயகுமார், ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி சீனிவாசராவ் மண்டபம் அருகில் 27.12.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட ப.க மேனாள் தலைவர் இரா.சிவகுமார், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, மன்னை மாவட்ட துணைச் செயலாளர் வீ.புஷ்பநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் வரவேற்புரை ஆற்றினார்.
துவக்க உரையாக திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர் கழக தலைவர் வே.அறிவழகன் உரையாற்றினார். மதிமுக மாவட்ட பொருளாளர் கோவி.சேகர் உரைக்கு பின் கழக பேச்சாளர் யாழ் திலீபன், கோ.செந்தமிழ் செல்வி ஆகியோர் உரையாற்றினார்கள் இறுதியாக நகரச் செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.
நிகழ்வில் முத்துப்பேட்டை ஒன்றியம், ஜாம்பவானோடை ரெ.கருணாநிதி, பொன்.செல்வராசு, திருத்துறைப்பூண்டி நகர துணை செயலாளர் ப.சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ம.முருகேசன், தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கர், ஒன்றிய ப.க செயலாளர் அ.கோபி, இளைஞரணி ஆ.சந்தோஷ்.
பெரம்பலூர்
தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி பாராட்டும் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்றது
27.12.2024 வெள்ளி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி தங்கராசு தலைமையேற்க, மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன் வரவேற்புரையாற்றினார். நகர தலைவர் அக்ரி ந. ஆறுமுகம்,மாவட்ட ப.க தலைவர் பெ.நடராஜன், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, மாவட்ட ப.க.செயலாளர் மருத்துவர் காந்தி, பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெ. பெரியசாமி வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் இரா.சின்னசாமி வேப்பந்தட்டை ஒன்றிய அமைப்பாளர் சர்புதீன் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி.பிச்சைப் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு. அறிவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு ந. செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்குரைஞர் ப.காமராஜ், இந்திய தொழிலாளர் கட்சி ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் முகமது இலியாஸ்,திமுக பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், திமுக மாவட்ட செயலாளர் வீ. ஜெகதீசன், தலைமை கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார் .
தந்தைப் பெரியாரின் தொண்டுகளை யும், வைக்கம் போராட்ட வரலாறு களை விளக்கியும், வைக்கம் போராட் டத்தினுடைய நூற்றாண்டு விழா சிறப்புகளை எடுத்துக் கூறியும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார். .ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.ரவிக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன் மந்திரமா ?தந்திரமா? நிகழ்ச்சிகளை செய்து காட்டி பார்வை யாளர்களை ஈர்த்தார்.
நிகழ்ச்சியில் வீர செங்கோலன்,சரவணன் சூரியகலா, தேனரசன் சுகுமாறன், பிறைசூடன், மணிமேகலை தமிழினியன், முகமது அனிபா வெங்கடேசன் அரங்க வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
திருவாரூரில் தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 24.12.2024 செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நகரத் தலைவர் கா.சிவராமன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட ப.க தலைவர் அரங்க ஈவேரா, மாவட்ட ப.க மேனாள் தலைவர் இரா.சிவக்குமார்,
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணை செயலாளர் கோ.ராமலிங்கம், மாவட்ட விவசாயணி செயலாளர் க.வீரையன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.நேரு, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.சரஸ்வதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெ.மண்டேதரி, நகரத் துணைச் செயலாளர் நா.துரைராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஆகியோர் முன்னிலையில். திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி திராவிட மாணவர் கழக தலைவர் வே.அறிவழகன் துவக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் லெனின், மதிமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஆரூர் ப.சீனிவாசன், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், கோ செந்தமிழ் செல்வி ஆகியோர் உரையாற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் மக்கள் அதிகாரம் இணை ஒருங்கிணைப்பாளர் லெனின், மதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆரூர் ப.சீனிவாசன், கழகத்தில் இணைந்த திருப்பள்ளி முக்கூடல் தோழர்கள், கழக சொற்பொழிவாளர் இராம அன்பழகன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது.
நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் கி.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளரனி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கழக சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், கோ.செந்தமிழ்ச்செல்வி, அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். ஒன்றிய பெருந்தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் ஏ.தேவா, மக்கள் அதிகாரம் அமைப்பாளர் மு.ஆசாத், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், ஒன்றிய துணைத் கு.ராஜேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் ஜெ.கனகராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் வ.சாம்பசிவம், ஒன்றிய மகளிரணி தலைவர் சவு.சரோஜா, பெரியார் பெருந்தொண்டர் பெ.கோவிந்தசாமி, செல்வராஜ், சின்னப்பா, மாவட்ட ப.க அமைப்பாளர் பெ.சசிகுமார், அன்னதானம், பன்னீர்செல்வம், இந்திராணி, வீராச்சாமி, ராவ், செந்தாமரைச்செல்வி, ரேணுகா, இராமையன், அறிவுக்கண்ணு, ஜானகி, வெள்ளையம்மாள், செல்லம்மாள், பட்டு, அல்போன்ஸ், தமயந்தி,
திருவாரூர் காசி.ராஜா, மனோஜ், கார்த்தி கேயன், அழகிரி நகர் ஆர்.வைத்தியநாதன், திருப்பள்ளி முக்கூடல் க.முருகையன், அ.செல்வகுமார், காட்டூர் சி.இளங்கோவன், இலவங்கார்குடி கோ.கணேசன், அ.ஜெயக்குமார், வை.திராவிடமணி,
குடவாசல் ஒன்றிய தலைவர் ந.ஜெய ராமன், ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர் மு.சரவணன், ஒன்றிய தலைவர் ஜே.வீரமணி, நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ்.கரிகாலன், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சு.சித்தார்த்தன், நகர துணைத் தலைவர் ப.சம்பத்குமார், திருவாரூர் நகர இளைஞரணி தலைவர் அ.செல்வேந்திரன், திருவாரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.பாஸ்கர், கொரடாச்சேரி இளைஞரணி தலைவர் மு.பாண்டியன் குடவாசல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.செல்வகுமார் நகர மகளிரணி தலைவர் சு.பிரியா இறுதியாக நகர செயலாளர் ப.ஆறுமுகம் நன்றி கூறினார்,
சோழங்க நல்லூர் மற்றும் வடகுடி
திருவாரூர் ஒன்றியம், திருவாதிரை மங்களம் ஊராட்சி சோழங்க நல்லூர் மற்றும் வடகுடியில், கழகத்தின் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், மாவட்ட மகளிரணி செயலாளர் சீ.சரஸ்வதி. ஒன்றிய துணை தலைவர் கு.ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வ.சாம்பசிவம், ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.பாஸ்கர், பாண்டியன், சசிகுமார், திமுக பொன்.ராஜேந்திரன், அறிவு, கண்ணன் பெரியார் பிஞ்சு, எயினி வி.சி.க அ.அசோகன், ப.சரவணத்தமிழன் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இராயநல்லூர்
தந்தை பெரியார் 51 ம் ஆண்டு நினைவு நாள் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் இராயநல்லூரில் உள்ள. தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் ந.செல்வம் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் மாலை அனிவித்தார்.
கண்கொடுத்தவனிதம்
கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்த வனிதம் கடை தெருவில் தந்தை பெரியார் 51வது நினைவு நாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில் ஒன்றிய செயலாளர் மு.சரவணன் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஜாம்பவானோடை ரெ.கருணாநிதி தலைமையில் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் திமுக மீனவர்அணி மாவட்டச் செயலாளர் கந்தசாமி, பொன்.செல்வராசு, பாலமுருகன், தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் வைக்கம் வெற்றி விழாப் பொதுக்கூட்டம் 30.12.2024 திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன் தலைமையேற்க,ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் ராஜேந் திரன், கோடங்குடி ரவி உல்லியக்குடிசிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சிங்காரவேலர் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டுகளை விளக்கியும் திராவிடமாடல் அரசின் சிறப்புகளை விளக்கியும் பாடல்களைப் பாடியும் சிறப்புரையாற்றினார். பின் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தனது சிறப்புரையில் தாத்தா அணைக்கரை டேப் தங்கராசு முதல் பெரியார் கொள்கையை தங்கள் குடும்பம் கடைபிடித்து வருகிறது என்றும் தந்தை
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் வழியில் தானும் தந்தைபெரியாரின் கொள்கை வழியில் பயணிப்பதாக பெருமிதத்துடன் எடுத்துக் கூறினார் . தேர்தல் நேரங்களில் கூட தான் சமரசம் செய்து கொள்வதில்லை என்றார். இறுதியாக தோழர் ரவி நன்றி கூறினார்.
காரை காட்டான் குறிச்சி க.விஜய ராகவன் க.ஆரோக்கியராஜ் ஆகிய இருவர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு ஆடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது .நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மா. கருணாநிதி மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு ராஜா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் த. செந்தில் ஜெயங்கொண்டம் பாவேந்தர் பாரதிதாசன் பொதுநல மன்ற தலைவர் சீ. குமார்,, கதிரவன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் திமுக தோழர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
சோலையார்பேட்டை
தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்க கூட்டம் 30.12.2024 திங்கட்கிழமை சோலையார் பேட்டை பேருந்து நிறுத்தம், பெரியார் சிலை அருகில் 4.00 மணி அளவில் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையிலும் சோலையார் பேட்டை அமைப்பாளர் கொ. இராஜேந்திரன் வரவேற்பிலும் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பெ. கலை வாணன், மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி செயலாளர்த. சாந்தி, சோலையார் நகர காப்பாளர் நரசிம்மன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க அசோகன், சோலையார்பேட்டை செயலாளர் மதியழகன், துணைச் செயலாளர் சோலையார்பேட்டை வள்ளுவன், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் சோலைப்பிரியன், அ. லட்சுமி மகளிரணி, மற்றும் இளைஞரணி தோழர்கள் ராமச் சந்திரன், பாபு ஜெகஜிவராம், கருணாநிதி, மாவட்ட தலைவர் மாணவர் கழக உலகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்புரையாற்றினார்கள்
கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் சோலையார்பேட்டை நகர தலைவர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.