203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி : சென்னை மாநகராட்சி நடவடிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.5 சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், 159.16 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகிறது. தீவிர தூய்மை பணியின் கீழ், சென்னை மாநகராட்சி பகுதி களில் குப்பை, கட்டட கழிவுகள், சாலையோரங்கள் மற்றும் சாலை மய்யத்தடுப்புகளில் உள்ள மண் மற்றும் குப்பையை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள், பூங்காக்களில் தூய்மை பணிகள், விழும் நிலையில் உள்ள மரங் களின் கிளைகளை அகற்றுதல், பெருமளவு குப்பை சேகரமாகும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பையை சுத்தம் செய்து, அவ் விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், சேதமடைந்த குப்பை தொட்டிகளுக்கு மாற்றாக புதிய குப்பை தொட்டிகள் வைத்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் 203 இடுகாடுகளில் 3.1.2025 அன்று தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உள்ள குப்பை, கட்டட கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள், மண்டிக்கிடக்கும் புல்செடிகள், புதர் செடிகளை அகற்றுதல், இதர தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. மாநக ராட்சி பகுதிகளில் உள்ள 203 சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணிகளில் 93.38 மெட் ரிக் டன் குப்பை, 65.78 மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் என மொத்தம் 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், 666 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *