கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

5.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்; காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் தீர்மானம்.
* ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. நடைமுறை முற்றிலும் பிழையானது; எந்த சட்டத்திருத்தம் இல்லாமலே சரி செய்திட வழி இருக்கிறது என்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராசன்.
*தனியார்மயத்தால் தரமான கல்வியை தர முடியாது: அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், சென்னை அய்அய்டி மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் மாநிலத்தை தீக்கிரையாக்கியது பாஜக எனும் தீக்குச்சி; எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதிலேயே பாஜக ஆர்வமாக இருக்கிறது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறீநாராயண குரு ஸநாதன தர்மத்தை ஆதரிப்பவர் அல்ல, ‘நாம் ஜாதி வேற்றுமைகளை கைவிட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.’ நாராயண குருவை பிரிவினைக்கு சமன் செய்து அவருடைய பாரம் பரியத்தை இழிவுபடுத்துவது அவதூறாக இருக்கும் என பினராயி விஜயன் பேச்சு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *