போளூர் பெரியார் தொண்டர் ‘வாயாடி’ சுப்பிரமணியன் நினைவு நாள்- வீரவணக்கம்!

1 Min Read

போளூர், ஜன. 5- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையாருமான வாயாடி சுப்பிரமணியன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாளான 3.1.2025 அன்று, போளூர் புதிய பேருந்து நிலையத்தில் அவருடைய உருவப் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் போளூர் நகர கழக தலைவர் ப.பழனி தலைமையில் நடைபெற்றது.

போளூர் நகர கழகத்தைச் சார்ந்த வி.ப.பிரபாகரன், பழம்பெரும் திமுக பெருந்தொண்டர் ஏ.சி. பெருமாள், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த கிருட்டினமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கே.வாசு, செங்கம் பகுதி முன்னூறு மங்கலம் திராவிடர் கழகத் தோழர் பழனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கி.பழனி, தோழர் பி.ஆறுமுகம், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.வேதாசலம், போளூர் வெற்றிச்செல்வன், கா.பழனி, பேராசிரியர் செல்வம் ஆகியோர் பங்கேற்று தோழர் வாயாடி சுப்பிரமணியனின் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினர்.
ஓய்வு பெற்ற வட்டாட் சியர் சு பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *